அனுமன் கும்பகர்ணனைஇராவணனோ என ஐயுற்றுத் தெளிதல்

கலிநிலைத்துறை

 4964.

ஆவ தாகியதன்மைய அரக்கனை, அரக்கர்
கோ எனாநின்றகுணமிலி இவன்எனக் கொண்டான்
காவல்நாட்டங்கள் பொறியுகக் கனலெனக்
                              கனன்றான்
ஏவனோஇவன் ?மூவரின் ஒருவனாம் ஈட்டான் !

     மூவரின் -மும்மூர்த்திகளில்; ஒருவன் ஆம் எனும் - ஒப்பற்ற
சிவபிரான் ஒப்பாவான் என்று கூறப்படும்; ஈட்டான் - வலிமையுடைய
அனுமன்; ஆவது ஆகிய தன்மைய - அப்படிப்பட்ட தன்மையுடைய;
அரக்கனை - அரக்கனாய கும்பகருணனை; இவன் ஏவனோ - இவன்
யாரோ (என ஐயுற்று); அரக்கர் கோ எனா - அரக்கர்களின் தலைவன்
என்று; நின்ற - நிலைபெற்றுள்ள; குணம் இலி - பண்பற்றவன்; இவன் எனா
-
இவன் என்று; கொண்டான் - மனத்திலே எண்ணிக் கொண்டு; காவல்
நாட்டங்கள் -
உலகைப் பாதுகாக்கும் கண்கள்; பொறி உக - நெருப்புப்
பொறி பறக்க; கனல் என - தீயைப் போன்று; கனன்றான் - சினங்
கொண்டான்.

     பிறர்,'அரக்கனை இராவணன் என்று கருதியதாகவும், பிறகு மூவரில்
(இராவணன், கும்பன், மேகநாதன்) யாவர் என்று எண்ணியதாகவும் கூறுவர்.
வை.மு.கோ. இவன் திரிமூர்த்திகளுள் யாராயினும் ஒருவன் என்று
சொல்லத்தக்க பெருமை உடையவனான அனுமன் என்று இறுதியடிக்கு உரை
வகுத்தார்.                                            (130)