498. | அலை புனல் குடையுமாபோல், மதுக் குடைந்து ஆடி, தம்தம் தலைவர்கட்குஇனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே, உலைவுறு வருத்தம்தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால் சிலை வளைத்துஉலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே. |
மாலை நேரம் வருவதுபார்த்து மதுவுண்டு தேன், கனி, பிறவற்றைத் தலைவர்களுக்குத் தந்து அங்கதன் சேனையினர் இருந்தபடி. 11-1 (482) முதல் 11-16 (498) வரை உள்ளபதினேழு பாடல்கள் வானரவீரர்கள் மதுவனம் அழித்தமை கூறியது. (11-17) |