498.

அலை புனல் குடையுமாபோல், மதுக் குடைந்து ஆடி,
                                     தம்தம்
தலைவர்கட்குஇனிய தேனும் கனிகளும் பிறவும்
                                     தந்தே,
உலைவுறு வருத்தம்தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்;
                                    இப்பால்
சிலை வளைத்துஉலவும் தேரோன் தெறும் வெயில்
                             தணிவு பார்த்தே.

     மாலை நேரம் வருவதுபார்த்து மதுவுண்டு தேன், கனி, பிறவற்றைத்
தலைவர்களுக்குத் தந்து அங்கதன் சேனையினர் இருந்தபடி. 11-1 (482) முதல்
11-16 (498) வரை உள்ளபதினேழு பாடல்கள் வானரவீரர்கள் மதுவனம்
அழித்தமை கூறியது.                                    (11-17)