4982. | ஆயது ஆகியஅகன்புனல் அகழியை அடைந்தான் 'தாய வேலையின்இருமடி விசைகொடு தாவிப் போய காலத்தும்போக்குஅரிது' என்பது புகன்றான்- நாயகன் புகழ்நடந்த பேர்உலகெலாம் நடந்தான். |
நாயகன் -இறைவனானஇராமபிரானின்; புகழ் நடந்த - புகழ் பரவிய; பேர் - பெரிய; உலகெலாம் - எல்லா உலகங்களிலும்; நடந்தான் - பரவிய அனுமன்; ஆயது ஆகிய - மேலே கூறப்பெற்ற தன்மையுடையதாகிய; அகன் புனல் அகழியை அடைந்தான் - அகன்ற நீரை உடைய அகழியைச் சார்ந்து; தாய வேலையின் - முன்பு கடந்த கடலைப் போல; இருமடி - இரண்டு மடங்கு; விசைகொடு - வேகத்தை மேற்கொண்டு; தாவி - கடந்து; போய காலத்தும் - போன போதிலும்; போக்கு அரிது - (இவ் அகழியைக்) கடப்பது கடினம்; என்பது - என்னும் மனக் கருத்தை; புகன்றான் - வெளிப்படையாகப் பேசினான். கடலைத் தாண்டியதுபோல இருமடங்கு வேகமாகத் தாண்டினாலும் கடக்க முடியாது என அனுமன் பேசினான். இராகவன் புகழ் பேசப்படும் இடங்களில் எல்லாம் பேசப்படும் புகழாளன் அனுமன். நடத்தல் - பரவுதல். மறவர் குறை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று (புறவெ - மாலை - வெட்சி - 8 கொ) (148) |