இடைநகர் அகழியின்ஏற்றம் கலிவிருத்தம் 4983. | மேக்குநால்வகை மேகமும் கீழ்விழத் தூக்கினால் அன்னதோயத்தது ஆய் துயர் ஆக்கினான்படைஅன்ன அகழியை வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ ? |
மேக்கு - மேலே உள்ள; நால்வகை மேகமும் - நான்கு வகையான மேகங்களும்; கீழ்விழ - (நீர்வேட்கையால்) கீழே விழுந்து விட; தூக்கினால் அன்ன - அம்மேகத்தைத் தூக்கி வைத்தாற் போன்ற; தோயத்தது ஆய் - தண்ணீரை உடையதாய்; துயர் ஆக்கினான் - உலகிற்குத் துன்பம் விளைவித்த இராவணனின்; படை அன்ன - சேனை போன்ற (கடக்க முடியாத); அகழியை - அகழியின் அமைப்பை; வாக்கினால் - வார்த்தைகளால்; உரை வைக்கலும் - விரித்துக் கூறவும்; ஆகுமோ - இயலுமா. இது அனுமனின்எண்ணம் - படை எங்கனம் கடக்கவொண்ணாதோ அதுபோல் அகழியும் கடக்க ஒண்ணாதது. அழச் செய்பவன் - என்னும் பொருள்தரும் சொல் இராவணன். கம்பர், அழுகைக்கு மூலகாரணமாகிய துயரத்தைத் தருபவன் என்றார். அளவடி நான்குடைக் கட்டளைக்கலிப்பா. மா - விளம் - விளம் - விளம் என்னும் சீர்களைப் பெற்று வரும். பாடலின் முதற்சீர் நேரசையாயின் பதினோரெழுத்தும், நிரையசையாயின் பன்னீரெழுத்தும் கொண்டு அமையும். இந்நூலில் இவ்விருத்தங்களின் தொகை 1198. (மணிமலர் 76) (149) |