4995. | வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்; காம நறையின்திறம் நுகர்ந்தனர் களித்தார்; பூமன் நறை வண்டுஅறை இலங்கு அமளி புக்கார்; தூம நறையின் துறைபயின்றிலர் துயின்றார். |
வாமம் -வாம மார்க்கத்தார் சிறப்பிக்கும்; நறையின் துறை - கள்ளின் வகைகளை; மயங்கினர் - உண்டு மயங்கியவர்; மறந்தார் - (இன்பம் அனுபவித்தலையும்) மறந்தார்; காம நறையின் திறம் - மன்மதன் உரைத்தபடி அனுபவிக்கவேண்டிய; நுகர்ந்தனர் - காமத்துறைகளாய கள்ளின் தன்மையை; களித்தார் - மயங்கி உறங்கினர்; (அங்ஙனம் உறங்கியவர்கள்) பூமன்நறை - மலர்களில் நிலைபெற்றுத் தேனுண்ணும்; வண்டு அறை - வண்டுகள் மொய்க்கும்; இலங்கு - விளக்கமான; அமளி புக்கார் - அமளியை அடைந்தும்; தூம - வாசனைப் புகைகளுடன் கூடிய; நறையின் துறை - நன்மையின் வகைகளை; பயின்றிலர் - அனுபவியாது; துயின்றார் -உறங்கினர். பல்வேறுகாதலர்களின் படுக்கை அறை நிலைகளைக் குறித்தாகக் கொள்க. (161) |