5007.

'ஆவது ஒன்றுஅருளாய்; எனது ஆவியைக்
கூவு கின்றிலை; கூறலை சென்று' எனா
பாவை பேசுவபோல், கண் பனிப்பு உற
பூவை யோடும்புலம்புகின்றார் சிலர்.

     சிலர் -வேறு சில யட்ச மகளிர்; கண் - கண்கள்; பனிப்பு உற -
கண்ணீர் சிந்த; பூவையோடும் - நாகணவாயப் பறவைகளுடன்; பாவை
பேசுவபோல் -
பதுமை பேசுவதைப் போல; ஆவது ஒன்று - எனக்குத்
தகுதியான ஒரு சொல்லையும்; அருளாய் - பேசமாட்டாய்; எனது ஆவியை
-
(பிரிந்து சென்ற) என் உயிரை;  கூவுகின்றிலை - அழைத்து வந்தாயில்லை;
சென்று கூறலை -
(இப்போதும் என் நிலைமையை) சென்று கூறவில்லை;
எனா - என்று; புலம்புகின்றார் - கவலைப்படுகின்றனர்.        (173)