5008.

ஈரத்தென்றல் இழுக, மெலிந்து தம்
பாரக்கொங்கையைப் பார்த்தனர்;
பாதகன்
வீரத்தோள்களின் வீக்கம் நினைந்து, உயிர்
சோரச் சோரத்துளங்கு கின்றார் சிலர்.*

     சிலர் - வேறு சில யட்சப் பெண்கள்; ஈரத் தென்றல் - குளிர்ந்த
தென்றற் காற்று; இழுக - உராய (அதனால்); மெலிந்து - இளைத்து; தம் -
தம்முடைய; பாரக் கொங்கையை - பாரமான தனங்களை; பார்த்தனர் -
பார்த்து; பாதகன் - இராவணனின் ; வீரத் தோள்களின் - வீரம் மிக்க
தோள்களினுடைய; வீக்கம் நினைந்து - கருவத்தை எண்ணி; உயிர் சோர
சோர - 
உயிர் மிகத் தளர்ச்சியடைய; துளங்குகின்றார் - கலக்கம்
அடைகின்றனர்.

     பாரமானகொங்கைகட்கும், கருவம் உற்ற தோள்களுக்கும் இடை நின்று
யட்ச மகளிர் கலங்குகின்றனர். பிரிவுக் காலத்து மகளிர் கொங்கையை
வெறுப்பர். 'வாரிய பெண்ணை' என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப்
பாடலைப் பார்க்கவும்.                                       (174)