5010. | வாளின் ஆற்றிய கற்பக வல்லியர், தோளின்நாற்றிய தூங்கு அமளித்துயில், நாளினால்செவியில் புகும்நாம யாழ்த் தேளினால்திகைப்பு எய்துகின்றார் சிலர்.* |
சிலர் - சில யட்சமகளிர்; வாளின் - ஒளிகளாலே; ஆற்றிய - செய்யப்பெற்ற; கற்பகவல்லியர் - கற்பகக் கொடிபோன்ற சேடியர்கள்; தோளின் - கைகளால்; நாற்றிய - தொங்கவிடப்பட்ட; தூங்கு அமளி - தொங்கும்படுக்கையில்; துயில் நாளினால் - உறங்கும் சமயத்தில்; செவியில் புகும் - காதுகளிற் புகுந்த; நாம யாழ்த் தேளினால் - அசசந் தரும் யாழாகிய தேளால்; திகைப்பு எய்துகின்றார் - கலக்கம் அடைகின்றனர். திகைத்தல் -செயலற்றிருத்தல் என்றும் கூறலாம். யாழ் என்றது யாழின் இசையை. செவியிற் புகுவது இசையே, யாழன்று. தூங்கு அமளி - தூங்கு கட்டில். இனியர் (பாலைக்கலி 12) துலங்கு ஊர்தி - தூங்கு கட்டில் என்று வரைந்தார். நாமம் - அச்சம். தோளின் - டோளியைப் போல் என்று உரை வகுத்தவரும் உளர். (டோள் - அசையும் பல்லக்கு) நாளினால் என்பதில் உள்ள 'ஆல்' இடப்பொருள் தந்தது. புள்ளினம் விதி சேரும் பொழுதினால் (கலித் நெய்தல் 6) (176) |