அனுமன்மண்டோதரியைக் காணல் 

5029.

ஆயவிஞ்சையர் மடந்தையர் உறைவிடம்
     ஆறு -இரண்டு அமைகோடித்
தூய மாளிகைநெடுந்தெருந் துருவிப் போய்,
     தொலைவில்மூன்று உலகிற்கும்
நாயகன்பெருங்கோயிலை நண்ணுவான்
     கண்டனன்,நளிர் திங்கள்
மாய நந்தியவாள்முகத் தொருதனி
     மயன்மகள்உறைமாடம்.

     ஆய - அப்படிப்பட்ட; விஞ்சையர் மடந்தையர் - வித்தியாதரப்
பெண்கள்; அமை ஆறு இரண்டு கோடி - தங்கியிருக்கும் பன்னிரண்டு
கோடி எண்ணுள்ள; தூய - தூய்மையான; மாளிகை - மாளிகைகளைப் பெற்ற;
நெடுந் தெரு - நீண்ட தெருக்களை; துருவிப் போய் - தேடிச் சென்று;
தொலைவில் - அழிதல் இல்லாத; மூன்று உலகிற்கும் நாயகன் - மூன்று
உலகிற்கும் தலைவனான இராவணனின்; பெருங்கோயிலை - பெரிய
அரண்மனையை; நண்ணுவான் - அடையும் அனுமன் (இடையில்);
நளிர்திங்கள் - குளிர்ந்த சந்திரனும்; மாய - ஒளி மழுங்க; நந்திய -
விளங்கிய; வாண் முகத்து - ஒளியையுடைய முகத்தைப் பெற்ற; ஒரு தனி -
ஒப்பற்ற; மயன்மகள் - மயனின் புதல்வியாகிய மண்டோதரி; உறைமாடம் -
தங்கியிருக்கும் மாளிகையை; கண்டனன் - பார்த்தான்.

     மயன் -அசுரர்களின் சிற்பி. மயன்மகளை இராவணன் திருமணம் செய்த
வரலாறு உத்தரகாண்டம் இராவணன் பிறப்புப்
 படலம் பேசும்.திங்கள் மாய் -
திங்களின் ஒளி குறைய. மாய்தல் - ஒளி குறைதல். பகல் மாய என்னும்
நெய்தற் கலித் (26-39(தொடர்க்கு இனியர் பகற்காலத்தின் 'ஒளி மழுங்க' என்று
உரை வகுத்தார்.                                          (195)