4751.
 

வெயில்இயல் குன்றம் கீண்டு
    வெடித்தலும், நடுக்கம் எய்தி,
மயில்இயல்தளிர்க்கை மாதர்
     தழீஇக்கொளப் பொலிந்த வானோர்,
அயில் எயிற்றுஅரக்கன் அள்ளத்
     திரிந்தநாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத்
    தனித் தனிகடுத்தல் செய்தார்.

    வெயில்இயல்குன்றம் - ஒளியமைந்த மகேந்திர மலை; கீண்டு
வெடித்தலும் -
பிளவுபட்டு இரண்டாதலும்; மயில்இயல் தளிர்க்கை மாதர் -மயில் போன்ற சாயலும், தளிர் போன்ற கைகளும் கொண்ட தெய்வப்
பெண்கள்; நடுக்கம் எய்தி தழீஇக் கொள்ள - அச்சமுற்றுத் தழுவிக்கொள்ள
(அதனால்); பொலிந்த வானோர் - பூரித்த தேவர்கள்; அயில் எயிற்று
அரக்கன் -
கூரிய பற்களைப் பெற்ற இராவணன்; அள்ள - பெயர்த்தெடுக்க;
திரிந்த நாள் -
(கயிலாய மலை) அசைந்த காலத்தில்; அணங்குபுல்ல -
உமாதேவி தழுவிக்கொள்ள; கயிலையில் இருந்த தேவை - கயிலாய
மலையில்வீற்றிருந்த சிவபிரானை; தனித்தனி கடுத்தல் செய்தார் -
ஒவ்வொருவரும்தனித்தனியே ஒத்திருந்தார்கள்.

     தத்தம்தேவிமாரால் தழுவப்பெற்ற தேவர்கள் உமையம்மை தழுவக்
கயிலாய மலையில் மகிழ்ந்த சிவபிரானை ஒத்திருந்தனர். வெயில் - ஒளி -
வெயில்விரி கனகக் குன்றத்து எழில் கெட - (கம்பன் - மிகை 226)    
(11)