5064. | வல்அரக்கன் தனைப்பற்றி வாயாறுகுருதிஉகக் கல் அரக்கும்கரதலத்தால் காட்டுஎன்று காண்கேனோ ? எல் அரக்கும்அயில் நுதிவேல் இராவணனும்இவ் ஊரும் மெல் அரக்கின்உருகிஉக வெந்தழலால் வேய்கேனோ ? |
கல் - மலைகளைக்கூட;அரக்கும் - பொடியாக்கும்; கரதலத்தால் - (என்னுடைய) கைகளால்; வல் - வலிமை உடைய; அரக்கன்தனை - இராவணனை; வாய் - வாய்வழியாக; குருதிஆறுஉக - இரத்த நதி பெருக்கெடுக்க; பற்றி - இறுக்கிப் பிடித்து; காட்டு என்று - பிராட்டியைக் காட்டுக என்று; காண்கேனோ - காண்பேனோ (அல்லது); எல் - சூரியனையே; அரக்கும் - வருத்துகின்ற; அயில் - கூர்மையான; நுதிவேல் - நுனியை உடைய வேலேந்திய; இராவணனும் - இராவணனும்; இவ்வூரும் - இந்த இலங்கையும்; மெல் அரக்கின் - மென்மையான அரக்கைப்போல; உருகிவிழ - உருகிவிழும்படி;வெந்தழலால் - கொடிய நெருப்பினாலே (இந்த ஊரை); வேய்கேனோ - மூடுவேனோ (எதைச் செய்வது). (230) |