5067.

வடித்துஆய்பூங் குழலாளை
     வான் அறியமண் அறியப்
பிடித்தான் இவ்அடலரக்கன்
     எனும்மாற்றம் பிழையாதால்;
எடுத்து ஆழிஇலங்கையினை
     இருங்கடல்இட்டு இன்று இவனை
முடித்தாலே யான்முடிதல்
     முறைமன்றஎன்றுணர்வான்.

(அனுமன்)

     வடித்து - சீவப்பெற்று; ஆய் பூ - ஆராய்ந்தெடுக்கப்பெற்ற பூக்கள்
அணியப்பெற்ற; குழலாளை - கூந்தலையுடைய பிராட்டியை; இ அடல்
அரக்கன் -
இந்த வலிமை மிக்க இராவணன்; வான் அறிய - விண்ணுலகம்
அறியவும்; மண் அறிய -  மண்ணுலகம் அறியவும்;பிடித்தான் - கவர்ந்தான்;
எனும் மாற்றம் -
என்று பேசப்படும் மொழி; பிழையாது - தவறாது (நான்);
ஆழி இலங்கையினை -
கடல் நடுவுள்ள இலங்கை மாநகரை; எடுத்து -
பெயர்த்தெடுத்து; இருங்கடல் இட்டு - பெரிய கடலினுள் போகட்டு; இவனை
-
இந்த இராவணனை; முடித்தால் - அழித்தால் (பிறகு) மன்ற உறுதியாக;
யான் -
நான்; முடிதல் - அழிதல்; மன்ற முறை - உறுதியாக நியாயம்
ஆகும்; என்று உணர்வான் -  என்று நினைப்பவன் ஆனான்.

     வடித்து -சீவப்பெற்று. மஞ்சு ஒக்கும் அளகஓதி மழை ஒக்கும் வடித்த
கூந்தல் என்று சூர்ப்பணகை பேசினாள்.

     பிழையாதால் -ஆல் - அசை. முடித்தாலே - ஏ அசை. ஆழி -
வட்டம்.                                                 (233)