விழுதல்,விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல், எழுதல்,ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித் தொழுதல்,சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல், அழுதல், அன்றி,மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.
(பிராட்டி)
விழுதல் -பூமியில் விழுதல்; விம்முதல் - தேம்பி அழுதல்; உறமெய்வெதும்புதல் - அதிகமாக உடல் வெப்பம் அடைதல்; வெருவல் -அஞ்சுதல்; எழுதல் - எழுந்திருத்தல்; ஏங்குதல், இரங்குதல் - வருந்துதல், அழுதல்; இராமனை எண்ணித் தொழுதல் - இராமபிரானை நினைந்து வணங்குதல்; சோருதல் - தளர்ச்சியடைதல்; துளங்குதல் - உடல் நடுக்கம் அடைதல்; துயர் உழந்து உயிர்த்தல் - துன்பத்தால் சிதைந்து பெருமூச்சுவிடுதல்; அழுதல் - புலம்புதல்; அன்றி - ஆகிய இச்செயலைத் தவிர; அயல் ஒன்றும் - வேறு செயல்கள் எதுவும்; செய்குவது அறியாள் - செய்வது அறியாதவளாக இருந்தாள்.
பிராட்டி அழுதல்முதலான செயல்களைத் தவிர வேறு ஒன்றும்அறியாதவளாய் இருந்தாள். மற்று - அசை. செய்குவது - கு - சாரியை.'காய்குவள் அல்லளோ' - கலித்தொகை 79. (5)