5077.

'அரிது-போகவோ, விதி வலி கடத்தல் !' என்று
                                    அஞ்சி,
'பரிதிவானவன்குலத்தையும், பழியையும், பாரா,
சுருதி நாயகன்,வரும் வரும்' என்பது ஓர்
                                   துணிவால்
கருதி, மாதிரம்அனைத்தையும் அளக்கின்ற
                                   கண்ணாள்.

     போகவோ -சிறையிலிருந்து தப்பிச் செல்லுதலோ; விதிவலி கடத்தல்
ஓ - விதியின் வலிமையைக்கடந்து போதலோ; அரிது - முடியாததாகும்;
என்று அஞ்சி - என்று கருதி அச்சமுற்று; சுருதி நாயகன் - வேதத்தின்
தலைவனான இராமபிரான்; பரிதி வானவன் குலத்தையும் - தன்னுடைய
சூரிய வம்சத்தையும்; பழியையும் - தனக்கு நேர்ந்த அவமானத்தையும்; பாரா
-
பார்த்து; வரும் வரும் - (உறுதியாக) வருவான் வருவான்; என்பது ஓர்
துணிவால் -
என்று (அடிமனம்) கூறும் உறுதிப்பாட்டால்; கருதி -
இராமபிரானது வருகையை எதிர்பார்த்து; மாதிரம் அனைத்தையும் - எல்லாத்
திசைகளையும்; அளக்கின்ற கண்ணாள் - துழாவிப் பார்க்கும்
கண்களையுடையாள்.

     போதல் என்னும்தொழிற் பெயர் போக என்னும் வடிவம் பெற்றது.
வரல் இயலாது - வர இயலாது என வந்தாற்போல, போகவோ என்பதில்
உள்ள ஓகாரத்தைக் கடத்தல் என்பதுடன் கூட்டவேண்டும். 'அரிது போகவோ'
என்னும் பாடம் சிறப்புடைத்து. போகவோ, கடத்தலோ அரிது - எனமுடிக்க.
விதி வலி கடத்தல் போகவோ - அரிது என்று கூட்டி, விதி வலி கடந்து
செல்லுதல் என்பது போக முடியாத அரிய காரியம் என்றும் கூறுவர் (அடை -
பதி) போகவோ, விதி வலி கடத்தல் அரிது என்று கூட்டி (யான்) உயிர்
நீங்குவேன் ஆகவோ என்றால் ஊழ்வினையின் வலிமையை மீளுதல் அரிது
என்றும் கூறுவர் (வை.மு.கோ) விதி வலி கடக்கப் போவது அரிது என்று
கூட்டி - ஊழ்வலியைக் கடக்கச் செல்லவே இயலாது - என்று கூறும் (அண்மல்.
கழ) கடக்க என்றும் பாடம் கொள்ளப்பெற்றது. அரிது போகவோ - இவ்வூரை
விட்டுப் போகலாம் என்றாலோ மிகவும் அரிதாயிருக்கிறது. விதி -
தெய்வசங்கற்பமோ வலி கடத்தல் - நமது செய்கையை விஞ்சியதாக இருக்கிறது
என்று உரை வகுத்தவர் வி.கோவிந்தப்பிள்ளை.                      (9)