5081.

'மாண்டுபோயினன் எருவைகட்கு அரசன் மன்;
                                   மற்றோர்,
யாண்டை என்நிலை அறிவுறுப்பார்கள் ? இப்
                                   பிறப்பில்
காண்டலோ அரிது'என்று, என்று, விம்முறும்;
                                   கலங்கும்;
மீண்டு மீண்டுபுக்கு எரி நுழைந்தாலென,
                                  மெலிவாள்.

     எருவைகட்கு அரசன்-  கழுகுகளின் தலைவனான சடாயு; மாண்டு
போயினன் -
 இறந்து விண்ணுலகை அடைந்தான்; மற்றோர் - வேறுபிறர்;
யாண்டை -
எங்கே; என் நிலை அறிவுறுப்பார்கள் -  என்னுடைய
தற்போதையநிலையைச் (இராமலக்குவர்க்குச்) சொல்வார்கள்; இப்பிறப்பில் -
(ஆதலால்) இந்தப் பிறப்பிலே (இராமலக்குவர்களை); காண்டலோ அரிது -
காண்பது அருமையானதாகும்; என்று என்று - என்று பலபடியாக எண்ணி;
விம்முறும் - துன்புறுவாள்; கலங்கும் - சஞ்சலம் அடைவாள்; மீண்டு
மீண்டு -
திரும்பத் திரும்ப; எரி புக்கு - நெருப்பு புகுந்து; நுழைந்தால்
என -
நுழைந்தாற் போல; மெலிவாள் - தளர்ச்சியடைவாள்.

     கழுகுகட்கு அரசன்இறந்து போயினனோ என்று பிராட்டி ஐயுறுவதாக
உரை கூறுவாரும் உளர். சடாயு இறந்து விட்டான் என்று கருதிப் பிராட்டி
"வன்துனை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்" என்று கூறிப்
புலம்புகிறாள் (கம்ப. 3447) ஆதலின் அவ்வுரை பொருந்தாது. எருவைகள் -
கழுகுகள். நெருப்புச் சுட்ட இடத்திலேயே மீண்டும் நெருப்புப் புகுந்து சுட்டாற்
போலப் பிராட்டி வருந்தினாள் என்க.                             (13)