5086.

'முரன் எனத் தகும் மொய்ம்பினோர் முன்
                        பொருதவர்போல்,
வரனும், மாயமும்,வஞ்சமும், வரம்பு இல வல்லோர்
பொர நிகழ்ந்ததுஓர் பூசல் உண்டாம் ?' எனப்
                         பொருமா,
கரன் எதிர்ந்ததுகண்டனள் ஆம் எனக் கவல்வாள்.

     முரன்எனத்தகும் - முரன் என்று கூறத்தகுந்த; மொய்ம்பினோர் -
வலிமை உடையவர்களாய்; முன் - ஆதி காலத்தில்; பொருதவர்போல் -
(திருமாலுடன்) போர் செய்தவர்களைப் போல; வரம்பில -  எல்லையற்ற;
வரனும் -
வரங்கள் பெறுவதிலும்; மாயமும் - மாயங்கள் புரிவதிலும்;
வஞ்சமும் -
வஞ்சகங்கள் செய்வதிலும்; வல்லோர் - ஆற்றல் பெற்றவர்கள்;
பொர -
தாக்குதலாலே; நிகழ்ந்தது ஓர் பூசல் - உண்டான ஒப்பற்ற போர்;
உண்டு ஆம் என -
பெரிதாய் இருக்குமென்று கூறி; பொருமா - மனம்
கலங்கி; கரன் எதிர்ந்தது
 - கரன்போர்க்களத்தில் போர் புரிவதை;
கண்டனள் ஆம் என -
நேரே கண்டாற் போல; கவல்வாள் - வருந்துவாள்.

     கரன் போரைப்பிராட்டி பார்த்ததில்லை. இப்போது அது கண்களுக்குத்
தெரிகிறது. அது கண்டனள் - அவர் பொர வந்ததும் பெருமான் கூடப்
பொருகிறதும் வானவெளித் தோற்றமாகக் கண்முன்னே அந்தப் போர்
கண்டவள் - என்பது பாடியுரை (அடை பதி) கரன் நெரித்து அது கண்டனள்
ஆம் எனக் கலுழ்வாள் என்று பாடம் கொண்டு கைகளை நெரித்துக் கொண்டு
அப்போரை நேரில் முன் பார்த்தது போல இப்பொழுதும் பாவித்து என்று
பொருள் கூறலும் ஆம் (அடை - பதி) பொர - தாக்க. பொருபுனல் (சிறுபாண்
- 118) 'போர் செய்ய' என்றும் கூறலாம். உண்டு - மிகுதி என்னும் பொருள்
தந்தது.                                                   (18)