5093. | உரம்கொள் தே மலர்ச் சென்னி, உரிமை சால் வரம் கொள்பொன் முடி, தம்பி வனைந்திலன், திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு இரங்கி ஏங்கியதுஎண்ணி, இரங்குவாள். |
தம்பி - தன்னுடையதம்பியாகிய பரதன்; உரம்கொள் தேமலர் - சிறப்பைக் கொண்ட பூக்களையும்; உரிமைசால் - உரிமை நிரம்பிய; வரம்கொள் பொன் முடி - (கைகேசி) வரத்தாற் பெற்ற கிரீடத்தையும்; சென்னி - தலையில்; வனைந்திலன் - அணியாமல்; திரங்கு செஞ்சடை கட்டிய - திரிக்கப்பட்ட சடையைக் கட்டிக் கொண்ட; செய்வினைக்கு - விதிக்கு; இரங்கி ஏங்கியது எண்ணி - மனம் கரைந்து வருந்தியதை நினைத்து; இரங்குவாள் - வருத்தம் அடைவாள். மலர்ச்சென்னிஎன்பதற்கு மலரணிந்த தலை என்று பொருள் கூறினர். தகும் எனிற் கொள்க. செய்வினை - விதி; செய்வினை மருங்கின் எய்தலும் உண்டு (மணிமேகலை) பரதன்பால் கொண்ட பாசம் தன் பால் இல்லையே என்று பிராட்டி தன்னிரக்கம் கொண்டாள். (25) |