5097. | வெவ்விராதனை மேவு அருந் தீவினை வவ்வி, மாற்றஅருஞ் சாபமும் மாற்றிய அவ் இராமனைஉன்னி, தன் ஆர் உயிர் செவ்விராது,உணர்வு ஓய்ந்து, உடல் தேம்புவாள்-- |
வெவ் விராதனை -கொடுமைசெய்யும் விராதனை; மேவு - சென்று சேர்ந்த; அருந் தீவினை வவ்வி - கொடிய பாவங்களை வாங்கிக் கொண்டு; மாற்ற அரும் - வேறு எவராலும் போக்க முடியாத; சாபமும் - சாபத்தையும்; மாற்றிய - போக்கிய; அவ் இராமனை உன்னி - அந்த இராமனை நினைந்து; தன் ஆருயிர் -தன்னுடைய அருமையான உயிர்; செவ் இராது - செம்மையாய் (உறுதியாய்) இல்லாமல்; உணர்வு ஓய்ந்து - அறிவு தளர்ச்சி அடைந்து; உடல் தேம்புவாள் - உடல் இளைப்பாள். விராதனையேமன்னித்த பெருமான் தன்பால் அருளின்றி உள்ளான்; காரணம் தன் மேல் சீற்றம் போலும் என்று கருதும் போது பிராட்டியின் துன்பம் அளவு கடந்தது. (29) |