சீதைதிரிசடையிடம் உற்றது கூறல் 5099. | ஆயிடை,திரிசடை என்னும், அன்பினால் தாயினும்இனியவள்தன்னை நோக்கினாள், 'தூய நீ கேட்டி,என் துணைவி ஆம்' எனா, மேயது ஓர்கட்டுரை விளம்பல் மேயினாள். |
ஆயிடை - (அரக்கியர்உறங்கியிருந்த) அப்பொழுது (பிராட்டி); திரிசடை என்னும் - திரிசடை என்னும் பெயர் பெற்ற; அன்பினால் - அன்பினாலே; தாயினும் இனியவள் தன்னை - தாயைவிட இனிமையானவளை; நோக்கினாள் - பார்த்து; தூயநீ - பரிசுத்தமாயிருக்கும் நீ; கேட்டி - கேட்பாயாக ! (நீ) என் துணைவியாம் - நீ என்னுடைய தோழியாவாய்; எனா - என்று; மேயது ஓர் கட்டுரை - அனுபவித்ததை உணர்த்தும் ஒப்பற்ற மொழியை; விளம்பல் மேயினாள் - சொல்லத் தொடங்கினாள். அரக்கியர் உறங்கும்சமயத்தில் பிராட்டி திரிசடையிடம் தான் அனுபவத்திற்கண்டதைக் கூறினாள். மேயது - அனுபவித்தது. மேயது என்னும் தெரிநிலை முற்று பெயரெச்சமாயிற்று. (மேய கட்டுரை) மேய கட்டுரை அனுபவமொழி. கட்டுரை என்பது தனித்தன்மையிழந்து மொழி என்னும் பொருள் தந்தது. (31) |