5106.

'ஆயது தேரின், உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்துஎதிரும் என்னுமால்;
தீயது தீயவர்க்குஎய்தல் திண்ணம்; என்
வாயது கேள்' என,மறித்தும் கூறுவாள்.

     தேரின் -ஆராய்ந்தால்; ஆயது - அந்த வண்டு; உன் ஆவி
நாயகன்-
உன்னுடைய உயிர் போன்ற தலைவனால்; ஏயது தூது - ஏவப்
பெற்றதூதுவன்; வந்து எதிரும் - வந்து சந்திப்பான்; என்னும் - என்று
தெரிவிக்கும்; தீயவர்க்கு - கொடியவர்களுக்கு; தீயது எய்தல் - தீமை
வருவது; திண்ணம் - உறுதியாகும் (அதை
 உறுதிப்படுத்த); என் வாயது -
என்பால் நிகழ்ந்த அனுபவத்தை; கேள் என - கேட்பாயாக! என்று; மறித்தும்
கூறுவாள் -
மேலும் சொல்லத் தொடங்கினாள்.

    அந்த வண்டு உன்உயிர்த்தலைவனால் ஏவப்பெற்ற தூதுவன் உன்னைச்
சந்திப்பான் என்பதை அறிவிக்கும் என்றாள். ஆயது - வெறும் சுட்டாய்
உள்ளது. 'ஆயது அறிந்தனர்' (கம்ப. 412)                        (38)