5112. | 'வில்-பகல் இன்றியே, இரவு விண்டு அற, எல் பகல்எறித்துளது என்னத் தோன்றுமால்; மல் பக மலர்ந்ததோள் மைந்தர் சூடிய கற்பக மாலையும்புலவு காலுமால். |
வில் - ஒளியொடு கூடிய; பகல் இன்றி - பகற்காலம் இல்லாமல் (இரவில்); இரவு விண்டு அற - இருள் நீங்கி ஒழியும்படி; எல்பகல் எறிந்துளது என்ன - சூரியன் பகலிலே ஒளியைப் பரப்புவது போல்; தோன்றும் - காட்சி தரும்; மல்பக - (எதிர்த்த) மல்லர்கள் பிளவு படும்படி; மலர்ந்த தோள் மைந்தர் - விரிந்த தோள்களையுடைய வீரர்கள்; சூடிய - அணிந்த; கற்பக மாலையும் - (தெய்வத்தன்மையுடைய) கற்பக மலரால் கட்டப் பெற்ற மாலையும்; புலவு காலும் - புலால் நாற்றம் வீசும். இரவில்உண்டாகும் ஒளியும், மாலை புலால் நாற்றம் வீசுவதும் கேட்டுக்கு அறிகுறி. கற்பகம் தெய்வத்தன்மை உடையது. அதில் புலால் நாற்றம் வீசுவது அதிசயம். (44) |