5115. | 'விண்தொடர் மதியினைப் பிளந்து, மீன் எழும்; புண் தொடர்குருதியின் பொழியுமால் மழை; தண்டொடு,திகிரி, வாள், தனு என்று இன்னன, மண்டு அமர்புரியுமால், ஆழி மாறு உற. |
மீன் - நட்சத்திரங்கள்;விண்தொடர் மதியினைப் பிளந்து - ஆகாயத்தில் செல்லும் சந்திரனைப் பிளந்து கொண்டு; எழும் - மேலே போகும்; மழை - ஆகாயத்தை மூடிய மேகம்; தொடர்புண்குருதி - ஆறாத புண்ணின் இரத்தத்தை; பொழியும் - கொட்டும்; தண்டு திகிரி வாள் தனு என்று இன்னன - தண்டாயுதம், சக்கரம், வாள், வில் என்று பேசப்படுகிற (திருமாலின்) ஆயுதங்கள்; ஆழி மாறு உற - கடல்கள் ததும்பிக் கொந்தளிக்க; மண்டு அமர் புரியும் - நெருங்கிப் போர் செய்யும். 'மண்டு அமர்புரியும்' எனவே ஏவுவார் இன்றி படைகள் தாமே போர் செய்யும் என்க. ஆல் - அசை. குருதி - இன் - பொழியும். இன் - அசை. தண்டொடு என்பதில் உள்ள ஒடு அசை. போது பொதுள என்பதைப் 'போதொடு பொதுள' என்று குறுந்தொகை பேசும் (குறுந்.155.) (47) |