5130. | 'அரக்கியர், அயில் முதல் ஏந்தும் அங்கையர், நெருக்கியகுழுவினர், துயிலும் நீங்கினர், இருக்குநர்; மற்றுஇதற்கு ஏது என் ?' எனா, பொருக்கெனஅவரிடைப் பொருந்த நோக்கினான். |
அரக்கியர் -அரக்கிமார்கள்; அயில் முதல் ஏந்தும் - வேல் முதலானஆயுதங்கள் ஏந்திய; அங்கையர் - கையை உடையவராய்; நெருக்கியகுழுவினர் - அடர்ந்த கூட்டத்தினராய்; துயிலும் நீங்கினார் - உறக்கத்திலிருந்து எழுந்தவராய்; இருக்குநர் - இருக்கின்றார்கள்; இதற்கு ஏது என் எனா - (இவ்விரவில்) இவ்வாறு இருப்பதற்குக் காரணம் யாது என்று ஆராய்ந்து; பொருக்கென - விரைவாக; அவர் இடை - அவ் வரக்கியர்களுக்கு நடுவே; பொருந்த நோக்கினான் - உற்றுப் பார்த்தான். இரவிலேஅரக்கியர்கள் ஆயுதங்கள் ஏந்தியபடி உறங்காமல் உள்ளனர். இதற்குக் காரணம் யாது என்று கருதி கூர்ந்து பார்த்தான். (62) |