5134. | 'மூவகை உலகையும் முறையின் நீக்கிய பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு இதால்; ஆவதே;அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே அவன்;இவள் கமலச்செல்வியே. |
இது - பிராட்டி சிறையிலிருக்கும் கொடுமை; மூவகை உலகையும் - மூன்று வகைப்பட்ட உலகங்களையும்; முறையின் நீக்கிய - நன்னெறியிலிருந்து பிறழச் செய்த; பாவி தன் - பாவியாகிய இராவணனுடைய; உயிர் கொள்வான் - உயிரைக் கவர்வதற்காகத் (திருமால்); இழைத்த - செய்த; பண்பு - செயலாகும்; ஆவதே - இது பொருந்துவதாகுமே?; அவன் - இந்த இராமபிரான்; அரவணைத்துயிலின் நீங்கிய - பாம்புப் படுக்கையில் மேற்கொண்ட உறக்கத்தை விட்டு வந்த; தேவனே - திருமாலே; இவள் - இந்தப் பிராட்டி; கமலச் செல்வியே - தாமரை மலரில் வீற்றிருக்கும்திருமகளே. பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு - என்பதற்கு இராவணன் தன்னுடைய உயிரைத் திருமால் அழிப்பதற்கு (அவனே) செய்த செயல் என்றும், விதி இராவணனை அழிக்க மேற்கொண்ட செயல் என்றும், பிராட்டி (தேவ மகளிரைச் சிறைமீட்க) இராவணனை அழிக்க மேற்கொண்ட செயல் என்றும் பலபடியாகக் கூறுவர். (66) |