அனுமன்மகிழ்ச்சி

5135.

'வீடினதுஅன்று அறன்; யானும் வீகலேன்;
தேடினென்கண்டனென்; தேவியே !' எனா,-
ஆடினன்; பாடினன்;ஆண்டும் ஈண்டும் பாய்ந்து,
ஓடினன்;உலாவினன்;-உவகைத் தேன் உண்டான்.

(அனுமன்)

     உவகைத் தேன்உண்டான் - மகிழ்ச்சியாகியதேனைக் குடித்து;
அறன் வீடினது அன்று - தருமம் அழியவில்லை; யானும் வீகலேன் -
யான் அழிய மாட்டேன்; தேடினென் - பிராட்டியைத் தேடிய யான்;
கண்டனென் - கண்டு கொண்டேன்; தேவியே - (இவள்) சீதாதேவியே; எனா
-
என்று கூறி; ஆடினன் பாடினன் - ஆடிப் பாடினான்; ஆண்டும் ஈண்டும்
பாய்ந்து -
அங்கும் இங்கும் பாய்ந்து; ஓடினன் உலாவினன் - ஓடி
உலாவினான்.

    முன்புபிராட்டியைக் காணாதபோது வீடுவேன் (காட்சி 1) (இறப்பேன்)
என்றவன் பிராட்டியைக் கண்டதும் வீகலேன் (இறவேன்) என்றான்.      (67)