சீதையின் தூய்மையைஅனுமன் வியத்தல் 5136. | 'மாசுண்டமணி அனாள், வயங்கு வெங் கதிர்த் தேசுண்டதிங்களும் என்னத் தேய்ந்துளாள்; காசுண்டகூந்தலாள் கற்பும், காதலும் ஏசுண்டதுஇல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ ? |
(அனுமன்) மாசுண்ட மணிஅனாள் - அழுக்கால் மூடப்பெற்ற மணி போன்றவள்; வயங்கு - விளக்கமான; வெங்கதிர் - கொடுமையான சூரியனின்; தேசுண்ட -ஒளியால் மறைக்கப் பெற்ற; திங்கள் என்ன - சந்திரனைப் போல; தேய்ந்துளாள் - (ஒளி) குன்றியுள்ளாள்; காசுண்ட கூந்தலாள் - அழுக்குப் படிந்த கூந்தலையுடைய பிராட்டியின்; கற்பும் - உறுதிப்பாடும்; காதலும் - இராமன்பால் கொண்ட காதலும்; ஏசு உண்டது இல்லை - தாழ்ச்சியடையவில்லை; அறத்திற்கு(ம்) ஈறுண்டோ ? - தருமத்திற்கும் அழிவுவருமா. சீதையின் கற்புமுதலானவை தாழ்ச்சியுறவி்ல்லை என்னும் சிறப்புக்கருத்தை தருமத்துக்கு ஈறுண்டோ என்னும் பொதுக் கருத்தால் உறுதிப்படுத்தலின் இது வேற்றுப் பொருள் வைப்பணி. விழுமணி மாசு மூழ்கிக் கிடந்தது என்பர் தேவர் (சிந்தா) (68) |