5159. | அந்தியில், அநங்கன், அழல்படத் துரந்த அயில்முகப் பகழி வாய் அறுத்த வெந்துறு புண்ணின்வேல் நுழைந்தென்ன, வெண்மதிப் பசுங் கதிர் விரவ, மந்த மாருதம்போய் மலர்தொறும் வாரி வயங்குநீர் மம்மரின் வரு தேன் சிந்து நுண்துளியின் சீகரத் திவலை, உருக்கியசெம்பு எனத் தெறிப்ப; |