5161. | மாலையும்,சாந்தும், கலவையும், பூணும், வயங்கு நுண்தூசொடு, காசும், சோலையின்தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும்,கொண்டு பின் தொடர, பாலின் வெண்பரவைத் திரை கருங் கிரிமேல் பரந்தெனச் சாமரை பதைப்ப, வேலைநின்றுஉயரும் முயல் இல் வெண் மதியின், வெண்குடைமீதுற விளங்க; |