5168.

'வாழி சானகி ! வாழி இராகவன் !
வாழி நான்மறை!  வாழியர் அந்தணர் !
வாழி நல் அறம்!' என்று உற வாழ்த்தினான்-
ஊழிதோறும் புதிதுஉறும் கீர்த்தியான்.

     ஊழிதோறும் -யுகங்கள்தோறும்; புதிது உறும் - புதுமையடையும்;
கீர்த்தியான் -
புகழை உடைய அனுமன்; சானகி - சீதாபிராட்டி; வாழி -
வாழ்க; இராகவன் - இராமபிரான்; வாழி - வாழ்க; நான்மறை - நான்கு
வேதங்கள்; வாழி - வாழ்க; அந்தணர் - அந்தணர்கள்; வாழியர் - வாழ்க;
நல்லறம் -
நல்ல தருமம்; வாழி - வாழ்க; என்று - என; உற
வாழ்த்தினான் -
 நன்றாக வாழ்த்தினான்.                    

     ஊழிக்காலந்தோறும் புதுமை அடையும் புகழாளனான அனுமன் பிராட்டி
வாழ்க, பெருமான் வாழ்க, வேதம் வாழ்க, வேதியர் வாழ்க, நல்லறம் வாழ்க
என்று வாழ்த்தினான். சானகி, இராகவன் - தத்திதம்; சனகன் புதல்வி; ரகுவின்
மரபினன் இதனைப் பிரயோக விவேகம் சாமானிய தத்திதன் (32) என்று
கூறும். உயர்ந்த புகழ் அல்லால் --- நிற்பது ஒன்று இல் என்று வேதம்
பேசிற்று. கவிச்சக்கரவர்த்தி அதனை ஒளிமயமாக்கினார்.            (100)