இராவணன் சீதையைஇரத்தல்

5169.

அவ் இடத்துஅருக எய்தி, அரக்கன்தான்,
'எவ் இடத்துஎனக்கு இன் அருள் ஈவது ?
நொவ் இடைக்குயிலே ! நுவல்க' என்றனன்,
வெவ் விடத்தைஅமிழ்து என வேண்டுவான்.

     வெவ்விடத்தை -கொடியநஞ்சினை; அமுதென - அமுதம் என்று
கருதி; வேண்டுவான் அரக்கன் தான் - (அதை) விரும்பும் இராவணன் தான்;அவ் இடத்து - அந்த இடத்திலே; அருகு எய்தி - பக்கத்தை எய்தி;
நொவ்இடைக்குயிலே -
வருந்தும் இடைபெற்ற குயில் போன்றவளே;
எனக்கு -
(உன்பால் அன்புடைய) எனக்கு;  அருள் ஈவது - அருளை
வழங்குவது; எவ்இடத்து - எப்போது; நுவல்க என்றனன் - கூறுக
என்றான்.

     நொ - வருத்தம்.அமர்ந்தனன் என்னும் முற்று வினை எச்சப்
பொருளில் வந்தது. இது முதல் 14 பாக்கள் இராவணன் மொழிகள்.      (101)