5176.

'ஈண்டு நாளும், இளமையும், மீண்டில;
மாண்டு மாண்டுபிறிது உறும் மாலைய;
வேண்டு நாள்வெறிதே விளிந்தால், இனி,
யாண்டு வாழ்வது ?இடர் உழந்து ஆழ்தியோ ?

     ஈண்டு - இந்த உலகத்தில்;நாளும் - ஆயுளும்; இளமையும் -
இளமைப் பருவமும்; மீண்டில - திரும்பி வராதவை (அவை); மாண்டு
மாண்டு -
அழிந்து அழிந்து; பிறிதுறும் - வேறியல்பைப் பெறுகின்ற;
மாலைய -
தன்மை உடையன; வேண்டும் நாள் - (பிறர்) விரும்பும் உன்
இளமைப் பருவம்; வெறிதே - வீணாக;
விளிந்தால் - அழிந்தால்;வாழ்வது -
(இன்புற்று) வாழ்க்கை நடத்துவது;யாண்டு -  எக்காலத்தில்; இனி - (பருவம்)
கடந்த பின்; இடர் உழந்து -(சென்றதை எண்ணி) துன்பத்தாற் குமைந்து
(அதில்); ஆழ்தியோ -அமிழ்வாயோ.

    நாள் - ஆயுள்."ஊற்றமும் உடைய நாளும்" (கம்ப,5202) மாலைய -
தன்மை உடையன. மாலை -இயல்பு.                            (108)