5177. | 'இழவு, எனக்கு, உயிர்க்கு எய்தினும் எய்துக, குழை முகத்து நின்சிந்தனை கோடினால்; பழக நிற்புறும்பண்பு இவை, காமத்தோடு, அழகினுக்கு, இனியார் உளர் ஆவரே ? |
குழை முகத்து -குண்டலம்அணிந்த முகத்தை உடைய; நின் - நின்னுடைய; சிந்தனை கோடினால் - மனம் வேறுபட்டால் (அதனால்); எனக்கு - (உன்பால் அன்புற்ற) எனக்கும்; உயிர்க்கு - என்னுடைய உயிர்க்கும்; இழவு - அழிவு; எய்தினும் எய்துக - வந்தாலும் வரட்டும் (அதுபற்றி வருந்தேன்) (ஆனால்) (யான் மறைந்த பின்) பழகி - ஒன்று பட்டு; நிற்புறும் - நிலைத்து நிற்கும்; பண்பு இயை - இயல்பைப் பொருந்திய; காமத்தோடு அழகி்ற்கும் - காமம் அழகு என்னும் இரண்டிலும் (உனக்கு இணையாக); இனி யார் - இனிமேல் எவர் (என்னைப் போல்); உளர் ஆவர்- பிறக்கப் போகின்றார்கள்? இழவு - அழிவு.யான் இறப்பது குறித்து வருந்தினேன். உனக்கு இணையானவர்கள் இனிப் பிறவார்களே என்று கவலைப்படுகிறேன் என்றான். உளராதல் - பிறத்தல். பழகப் பழக நிற்பது காமம் என்றான். அழகுக்கு அப்பண்பு இல்லை என்றான். மாயும் அழகு நிற்கும் போதே மாயாத காமம் அனுபவிக்கத் தக்கது என்பது இராவணன் கோட்பாடு. (109) |