5195.

' "மானுயர்இவர்" என மனக் கொண்டாய்எனின்,
கான் உயர் வரைநிகர் கார்த்தவீரியன்-
தான் ஒருமனிதனால் தளர்ந்துளான்எனின்,
தேன் உயர்தெரியலான் தன்மை தேர்தியால்.

     இவர் - இந்தஇராமலக்குவர்கள்; மானுயர் என - மனிதர் தானே
(வெல்லலாம்) என்று; மனக் கொண்டாய் எனின் - நீ மனத்தில் எண்ணினால்(அது தவறு); கான் உயர் - காடுகளால் உயர்வு பெற்ற; வரை
நிகர் -
மலையை ஒத்த; கார்த்த வீரியன்தான் - கார்த்த வீரியார்ச்சுனனே;
ஒருமனிதனால் - ஒரு மனிதன் ஆகிய பரசுராமனால்; தளர்ந்துளான்
எனின் -
தோல்வி அடைந்து அழிந்தான் என்றால்; (உன்னை அடக்கிய)
தேன் உயர் -தேனாற் சிறப்புப் பெற்ற; தெரியலான் - மாலையணிந்த
இராமனின்; தன்மை -இயல்பை; தேர்தி - அறிக.

     நான் புலத்தியன்மரபினன். இராமலக்குவர்கள் மனிதர்கள். தவம்
செய்பவர்கள் என்று இராவணன் கருதினான். பிராட்டி, உன்னை
வாட்டியவர்களில் ஒருவன் மனிதன்; மற்றொருவன் தவசி என்று கூறினான்.
இப்படி ஒரு மெய்ப் பொருளை அண்ணாமலைப் பதிப்பு துலக்கிற்று. தான் ஒரு
மனிதனால் - என்பதில் உள்ள 'தான்' என்பது உரை அசை - நேர்தியால் -
ஆல் - அசை. மானுயர் - மனிதர். சிறு மானுயர் தம்மை என்றான் (நீலகேசி
408)                                                  (127)