அனுமன் சிந்தனை

 5207.

அன்னகாலையில், அனுமனும், "அருந்ததிக் கற்பின்,
என்னை ஆளுடைநாயகன், தேவியை, என் முன்,
சொன்ன நீசன்,கை தொடுவதன்முன், துகைத்து
                                   உழக்கி,
பின்னை, நின்றதுசெய்குவென்' என்பது பிடித்தான்.

     அன்ன காலையில்- அந்தச்சமயத்தில்; அனுமனும் -
அனுமனானவன்; அருந்ததி கற்பின் - அருந்ததி போன்ற கற்புடைய;
என்னை ஆளுடை - என்னை அடிமையாகக் கொண்ட; நாயகன் தேவியை
-
இராமபிரானின் பத்தினியை; என்முன் - எனக்கு எதிரில்; சொன்ன நீசன்
கை -
இழித்துப் பேசிய இராவணன் கை; தொடுவதன் முன் - பிராட்டியைத்
தொடுவதற்கு முன்பு; துகைத்து - காலாலே மிதித்து; உழக்கி - கையாலே
பிசைந்து (கொன்றபின்); பின்னை - மறுபடி; நின்றது செய்குவென் -
நிலைத்த நற்பணியைச் செய்வேன்; என்பது - என்னும் எண்ணத்தை;
பிடித்தான் - உறுதியாகப் பற்றிக் கொண்டான்.

    என்னை ஆளுடைநாயகன் - இராமபிரான். கவிக்கு நாயகர் இருவரும்
(அனுமன், கம்பன்) இங்ஙனம் பேசுவர். (கம்ப. 204.) அனுமன், 'நின்றது
செய்குவென்' என்றான். அது அடுத்த பாடல் பேசும். அனுமனும் - உம்.
அசை. 'காமக்கடல் மன்னும் உண்டே' (குறள் 464, உரை)           (139)