5208.

'தனியன்நின்றனன்; தலை பத்தும் கடிது உகத்
                                  தாக்கி,
பனியின்வேலையில் இலங்கையைக் கீழ் உறப்
                                  பாய்ச்சி,
புனித மா தவத்துஅணங்கினைச் சுமந்தனென்
                                  போவென்,
இனிதின்' என்பதுநினைந்து, தன் கரம்
                             பிசைந்திருந்தான்.

     தனியன் -தனித்துள்ள யான்; நின்றனன் - எழுந்து நின்ற
இராவணனின்; தலைபத்தும் - பத்துத் தலைகளும்; கடிது உகத் தாக்கி -
வேகமாகச் சிதறும்படி மோதி; இலங்கையை - இலங்கை மாநகரை; பனி
வேலையில் -
குளிர்ந்த கடலின்கண்; கீழ் உற - அடிப்பகுதியை அடைய;
பாய்ச்சி - அமிழ்த்துவிட்டு (பிறகு); புனிதம் - தூய்மையான; மாதவத்து
அணங்கினை -
பெருந்தவம் செய்யும் பிராட்டியை; சுமந்தனென் - சுமந்து
கொண்டு; இனிதின் போவென் - மகிழ்ச்சியுடன் (இராவணன்பால்) செல்வேன்;என்பது
நினைந்து - என்பதைக் கருதி;தன் கரம் பிசைந்து -
தன்னுடைய கரங்களைப் பிசைந்தபடி; இருந்தான் - சந்தர்ப்பம்
நோக்கியிருந்தான்;

    தனியன் என்பதைஇராவணனுக்கு ஆக்கின் அஃது அனுமனுக்கு
இழுக்கு. இராவணன் தனியே உள்ளான்; கொல்லல் எளிது என்று வீரனான
அனுமன் கருதான்.                                      (140)