521.

வனை கருங்குழலியைப்  பிரிந்த மாத் துயர்
அனகனுக்கு அவள்எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்தபேர் உவகை மாட்சி கண்டு,
அனுமனும்அண்ணலுக்கு அறியக் கூறுவான்;

     இராமன் மகிழ்ச்சியும்அனுமன் கூற்றும்.              (23-1)