5227.

அறிந்தார், அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல;
பிறிந்தார்சீற்றம்; மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்;
செறிந்தார் ஆயதீவினை அன்னார் தெறல்
                                எண்ணார்;
நெறிந்து ஆர்ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள்.

     அறிந்தார் அன்ன- முக்காலமும் அறிந்தவரை ஒத்த; முச்சடை
என்பாள் -
திரிசடை என்பவள்; அது சொல்ல - அம்மொழியைக்கூற;
மன்னனை அஞ்சிப் பிரிகில்லார் -
அரசனுக்காகப் பயப்பட்டு சீதையை
விட்டுப் பிரியாத அரக்கிகள்; சீற்றம் பிரிந்தார் - கோபத்திலிருந்து விலகினர்;ஆய தீவினை அன்னார் - அந்த தீவினைபோலும் அரக்கிகள்;
தெறல்
எண்ணார் - துன்புறுத்தநினையாமல்; செறிந்தார்-அடங்கியிருந்தனர்;
நெறிந்து ஆர் ஓதி -
சுருண்ட கூந்தலையுடைய; பேதையும் - பிராட்டியும்;
ஆவி நிலை நின்றாள் -
உயிர் நிலைக்கப் பெற்றாள்.

     அறிந்தார் -முக்காலமும் அறிந்த ஞானிகள். மன்னனை அஞ்சிப்
பிரியாதார், சீற்றம் பிரிந்தார். தீவினை அன்னார் தெறல் என்றார் செறிந்தார்,
பேதையும் ஆவி நிலை நின்றாள் என்று கூறுக. திரிசடையைத் தமிழாக்கி
முச்சடை என்றான்.                                      (159)