5227. | அறிந்தார், அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல; பிறிந்தார்சீற்றம்; மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்; செறிந்தார் ஆயதீவினை அன்னார் தெறல் எண்ணார்; நெறிந்து ஆர்ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள். |
அறிந்தார் அன்ன- முக்காலமும் அறிந்தவரை ஒத்த; முச்சடை என்பாள் - திரிசடை என்பவள்; அது சொல்ல - அம்மொழியைக்கூற; மன்னனை அஞ்சிப் பிரிகில்லார் - அரசனுக்காகப் பயப்பட்டு சீதையை விட்டுப் பிரியாத அரக்கிகள்; சீற்றம் பிரிந்தார் - கோபத்திலிருந்து விலகினர்;ஆய தீவினை அன்னார் - அந்த தீவினைபோலும் அரக்கிகள்; தெறல் எண்ணார் - துன்புறுத்தநினையாமல்; செறிந்தார்-அடங்கியிருந்தனர்; நெறிந்து ஆர் ஓதி - சுருண்ட கூந்தலையுடைய; பேதையும் - பிராட்டியும்; ஆவி நிலை நின்றாள் - உயிர் நிலைக்கப் பெற்றாள். அறிந்தார் -முக்காலமும் அறிந்த ஞானிகள். மன்னனை அஞ்சிப் பிரியாதார், சீற்றம் பிரிந்தார். தீவினை அன்னார் தெறல் என்றார் செறிந்தார், பேதையும் ஆவி நிலை நின்றாள் என்று கூறுக. திரிசடையைத் தமிழாக்கி முச்சடை என்றான். (159) |