5246.

'வருந்தல்இல் மானம், மா அனைய மாட்சியர்
பெருந் தவம்மடந்தையர் முன்பு, பேதையேன்,
"கருந் தனிமுகிலினைப் பிரிந்து, கள்வர் ஊர்
இருந்தவள்,இவள்" என, ஏச நிற்பெனோ ?

     வருந்தல்இல் -(உயிரைவிட) துன்பம் அடையாத; மானம் மா அனைய- மானமுடைமையின்கண் கவரிமானைப் போன்ற; மாட்சியர் -
சிறப்பைப்பெற்ற; பெருந்தவ மடந்தையர் முன்பு - பெருந்தவமுடைய
மகளிருக்குமுன்னர்; பேதையேன் - அறிவற்ற யான்; கருந்தனி முகிலினை
-
கரியஒப்பற்ற மேகம் போல்பவனை; பிரிந்து - பிரிந்து; இவள் - இநத்ச்
சீதை;கள்வர் ஊர் இருந்தவள் - கள்வர்கள் வாழும் இலங்கையில்
வாழ்ந்தவள்;என - என்று; ஏச நிற்பெனோ - பழித்துப்பேச அதுகேட்டு
இருப்பேனோ ?

     சிறுமயிர்நீப்பினும் வாழாத  கவரிமான்போல் சிறு பழிச் சொல்லும்
பொறாது பலர் இறப்பர். அவர்கள் முன் யான் பிறர் பழிக்க வாழேன்
என்றாள். மயிர்நீப்பின் வாழாக்கவரிமா.. என்று பேசியது தமிழ் மறை
(குறள்.969)                                            (19)