அனுமன் தன்னைஇராமதூதன் என்று மொழிதல். 5250. | 'அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால்; குடைந்து உலகுஅனைத்தையும் நாடும் கொட்பினால் மிடைந்தவர்உலப்பு இலர்; தவத்தை மேவலால், மடந்தை ! நின்சேவடி வந்து நோக்கினேன். |
மடந்தை -அம்மையே;அடியனேன் - அடியவனான யான்; இராமன் ஆணையால் - இராமபிரானின் கட்டளையால்; அடைந்தனென் - இங்கு வந்து சேர்ந்தேன். உலகு அனைத்தையும் - எல்லா உலகங்களையும்; குடைந்து நாடும் - துருவி உன்னைத் தேடும்; கொட்பினால் - கருத்தினால்; மிடைந்தவர் - நெருங்கிப் புறப்பட்டவர்கள்; உலப்பிலர் - அளவற்றவர்கள்; தவத்தை மேவலால் - யான் தவப் பயனை அடைதலாலே; நின் சேவடி - உன்னுடைய திருவடியை; வந்து நோக்கினேன் - வந்து பார்த்தேன். கொட்பு -கருத்து. இராசமாதேவி கூட வைக்கும் கொட்பினள் ஆகி (மணிமேகலை 21 - 76 -77 தவப்பயன் தவம் என்று பேசப் பெற்றது. காரியம் காரணமாக உபசரிக்கப் பெற்றது. (திருக்குறள் - உரை - 201) குடைதல் - துருவுதல்.தேடும் பொருள் பூமியில் இலை எனின் உலகைத் தோண்டிப் பார்ப்பர். அது சகரர் வரலாற்றில் அறிக. (23) |