5257.

'மற்று,அவன் முன்னோன் வாலி; இராவணன் வலி
                         தன் வாலின்
இற்று உகக்கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து
                         பாய்ந்த
வெற்றியன்;தேவர் வேண்ட, வேலையை, விலங்கல்
                         மத்தில்
சுற்றிய நாகம்தேய, அமுது எழ, கடைந்த தோளான்.

     அவன்முன்னோன் -அந்தச்சுக்கிரீவனின் தமையன்; வாலி -
வாலியாவான் (அவ்வாலி); தன் வாலில் - தன்னுடைய வாலிலே; இராவணன்
வலி -
இராவணன் ஆற்றல்; இற்று உக கட்டி - அழிந்து சிதைய வாலிலே
கட்டி; எட்டுத் திசையினும் - எட்டுத்திசைகளிலும்; எழுந்து பாய்ந்த
வெற்றியன் -
நிமிர்ந்து பாய்ந்த வெற்றியுடையவன்; தேவர் வேண்ட -
தேவர்கள் வேண்டிக் கொள்ள; வேலையை - பாற்கடலை; விலங்கல் மத்தில்
-
மந்தரகிரி என்னும் மத்தினாலே; சுற்றிய நாகம் தேய - சுற்றியிருக்கும்
வாசுகி தேயும்படி; அமுது எழ - அமிர்தம் தோன்றும்படி; கடைந்த
தோளான் -
கடைந்த தோளையுடையவன்.

     இப்பாடல்முற்றும் வாலியின் சிறப்பே பேசப்படுகிறது. வாலி
இராவணனை வாலால் கட்டியது பல பகுதியில் பேசப்படும். வாலி கடல்
கடைந்த செய்தியைச் சிவஞான முனிவர் 'கருங்கழல் வாலி .....  வாலமும்
பணமும் இருங்கையில் பற்றி கடைந்தனன் புணரி' என்பர். (காஞ்சிப்புராணம் -
மணிகண்டேச 14) தோள் - கை. தோள் ஒரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
என்பர் பட்டினத்தார். (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை) மற்று - அசை.
                                                         (30)