5258.

'அன்னவன்தன்னை, உம் கோன், அம்பு ஒன்றால்
                               ஆவி வாங்கி,
பின்னவற்கு அரசுநல்கி, துணை எனப் பிடித்தான்;
                                எங்கள்
மன்னவன்தனக்கு,நாயேன், மந்திரத்து உள்ளேன்;
                         வானின்
நல் நெடுங்காலின் மைந்தன்;
நாமமும் அனுமன்
                         என்பேன்.

     உம்கோன் -உமதுதலைவனான இராமபிரான்; அம்பு ஒன்றால் - ஒருஅம்பினாலே; அன்னவன் தன்னை - அந்த வாலியின்; ஆவி வாங்கி
-
உயிரைப் போக்கி; பின்னவற்கு - அவன் தம்பியாகிய சுக்கிரீவனுக்கு; அரசு
நல்கி -
அரச பதவியை வழங்கி (உன்னைத்தேட); துணை எனப்பிடித்தான் -உதவியாகப் பற்றிக் கொண்ட அவனை; எங்கள் மன்னவன் தனக்கு -
எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கு; நாயேன் - அடியேன்; மந்திரத்து
உள்ளேன் -
ஆலோசனைச் சபையில் உள்ளேன்; வானின் -
ஆகாயத்திலிருந்து தோன்றிய; நல்நெடுங் காலின் மைந்தன் - நல்ல நீண்ட
வாயு தேவனின் புதல்வன்; நாமம் - பெயர்; அனுமன் என்பேன் - அனுமன்
என்று பேசப்படுவேன்.

      வானிலிருந்துகாற்று தோன்றிற்று என்று பேசுவது இந்திய மரபு.
ஆதலின் வானின் கால் என்று பேசப்பெற்றது. வான் - மூலப்பிரகிருதி
இராமபிரான்பால், 'காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன்.
நாமமும் அனுமன் என்பேன்' (கம்ப. 3765.) என்று பேசினான். இராவணனை
வென்ற வாலி இராமபிரானின் ஓர் அம்பால் இறந்தான். ஆதலால்
இராவணனின் வலிமை கண்டு கலங்க வேண்டா என்பது குறிப்பு.     (31)