'ஆயவன் தன்மை நிற்க; அங்கதன், வாலி மைந்தன், ஏயவன் தென்பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை மேயின படர்ந்துதீர, அனையவன் விடுத்தான் என்னை, பாய் புனல் இலங்கை மூதூர்க்கு' என்றனன், பழியை வென்றான்.
ஆயவன் தன்மைநிற்க - அந்த இராமனின் தன்மை இப்படியிருக்க;தென்பால் - தெற்குத் திசையில்; ஏயவன் - (சுக்கிரீவனால்) ஏவப்பெற்றவனும்; வாலி மைந்தன் - வாலியின் புதல்வனும் (ஆகிய); அங்கதன் -அங்கதன் என்பவன்; இரண்டு வெள்ளம் சேனையோடு - இரண்டுவெள்ளஞ்சேனையுடன்; எழுந்து படர்ந்து - எழுச்சி பெற்றுப் பரவி; மேயினதீர - வந்தவைகள் முடிவு போகச் செல்ல; அனையவன் - அந்த அங்கதன்;பாய்திரை - பரவிய அலைகளால் சூழப்பெற்ற; இலங்கை மூதூர்க்கு -இலங்கைக்கு; என்னை விடுத்தான் - என்னை அனுப்பினான்; என்றனன் -என்று கூறினான் (கூறியவன்); பழியை வென்றான் - பழிக்கப்படும்புலன்களை வென்ற அனுமன். (36)