சீதை அனுமனைவாழ்த்துதல்.

5297.

இத்தகையள் ஆகி, உயிர் ஏமுற விளங்கும்,
முத்த நகையாள்,விழியின் ஆலி முலை முன்றில்
தத்தி உக, மென்குதலை தள்ள, 'உயிர் தந்தாய் !
உத்தம !' எனா,இனைய வாசகம் உரைத்தாள்;

(திருவாழிபெற்றமையால்)

     உயிர் ஏமுற -உயிரினம்மகிழ்ச்சி பெருக (அதனாலே); விளங்கும் -
பொலிவுறுகின்ற; முத்த நகையாள் - முத்தை ஒத்த பற்களை உடைய பிராட்டி;இத்தகையள் ஆகி - இப்படிப்பட்ட மெய்ப்பாடு உடையவளாய்;
விழியின்ஆலி - கண்களில் வழியும் நீர்த்துளிகள்; முலை முன்றில் -
தனங்களின்மேற்பரப்பில்; தத்தி உக - பட்டுத் தெறித்துச் சிதறவும்; மென்
குதலை தள்ள-
மெல்லிய மழலைச் சொற்கள் தடுமாறவும்; (பூரித்து) உத்தம
! -
மேலானவனே (நீ); உயிர் தந்தாய் - என் உயிரை வழங்கினாய்; எனா -
என்று (புகழ்ந்து); இனைய வாசகம் - இந்த மொழிகளை; உரைத்தாள் -
கூறினாள்.

    அகத்தின்மகிழ்ச்சி பிராட்டியின் பற்களில் விளங்கிற்று. முலை முன்றில்
- மார்பின் மேற்பரப்பு. ஏந்து முலை முற்றம் (அகம் 51) ஆலி - நீர்த்துளி.
இங்கு கண்ணீரைக் குறிக்கிறது. தன்னை வருத்தியும் பிறருக்கு உதவுபவன்
உத்தமன் (திருப்பாவை - ஓங்கி உலகளந்த - உரை) வாசகம் பொருள்
பொதிந்த சொல்.                                             (70)