5309.

'அயர்ந்தவர், அரிதின் தேறி, ஆண் தொழில்
                        தாதைக்கு, ஆண்டு,
செயத் தகுகடன்மை யாவும், தேவரும் மருளச்
                        செய்தார்;
"கயத் தொழில்அரக்கன்தன்னை நாடி, நாம்
                        காண்டும்" என்னா,
புயல் தொடுகுடுமிக் குன்றும், கானமும், கடிது
                        போனார்.

     அயர்ந்தவர் -மனம்சோர்ந்த இராமலக்குவர்கள்; அரிதின் தேறி -
சிரமப்பட்டுத் தெளிந்து (அவர்கள்); ஆண் தொழில் தாதைக்கு - ஆண்மைத்தொழில் புரிந்த தந்தைக்கு; ஆண்டு செயத் தகு கடன்கள்
யாவும் -
அவ்விடத்துச் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும்; தேவரும்
மருள -
தேவர்களும் வியந்து மருட்சியடைய; செய்தார் - செய்து
நிறைவேற்றினர்(பிறகு) (இராமலக்குவர்கள்); கயத் தொழில் அரக்கன்
தன்னை -
கயமைத்
 தொழிலில் வல்லஇராவணனை; நாடி நாம் காண்கும்
என்னா -
நாம் தேடிக் கண்டு பிடிப்போம் என்று கருதி; புயல் தொடும் -
மேகமண்டலத்தை அளாவிய; குடுமிக் குன்றும் - சிகரத்தை உடைய
மலைகளையும்; கானமும் - காடுகளையும் (கடந்து); கடிது - விரைந்து;
போனார் - சென்றனர்.

     கயமைத் தொழில்என்பது கயத் தொழில் என்று வந்தது; தம்மை
நியமிப்பார் இன்றி மனம் விரும்பியபடி செய்பவன் கயவன்.           (82)