5316.

'வந்தான்இளையானொடு, வான் உயர் தேரின்
                                   வைகும்
நந்தாவிளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடங்குன்றினில்; தன் உயிர்க்
                                   காதலோனும்
செந் தாமரைக்கண்ணனும், நட்டனர் தேவர் உய்ய.

(இராமபிரான்)

     வான் உயர் -விண்ணில் உயர்ந்துள்ள; தேரின் வைகும் - தேரிலே
வீற்றிருக்கும்; நந்தா விளக்கின் வரும் - குறைவுபடாத சூரியன் பால் உதித்த;எம்குல நாதன் வாழும் - எமது குலத்தவனான சுக்கிரீவன்  தங்கிய;
சந்துஆர் -
சந்தன மரங்கள் செறிந்த; தடங்குன்றினில் - பெரிய இருசிய
மூகமலையில்; இளையானொடு வந்தான் - இளைய பெருமாளுடன் வந்தான்;
(அங்கு) செந்தாமரைக் கண்ணனும் - தாமரை போன்ற கண்களை உடைய
இராமபிரானும்; தன் உயிர்க்காதலோனும் - தன்னுடைய உயிர் மேல்
அன்புள்ள சுக்கிரீவனும்; தேவர் உய்ய - தேவர்கள் வாழ்வு பெற; நட்டனர்
-
நட்புப் பூண்டனர்.

     நந்தா விளக்கு -சூரியன். வருதல் - தோன்றுதல் (பிறத்தல்) தசரதன்
மதலையாய் வருதும் (திரு அவதாரம்) சந்து -  சந்தனம். அந்துவன் பாடிய
சந்து செழு நெடுவரை  (அகம் 59) தாமரைக்கண்ணன் - திருமால்
(இராமபிரான்) தன்உயிர்க்காதலோன் - சுக்கிரீவன் - தன்னுடைய உயிர்மேல்
ஆசை வைத்தவன்வாலிக்குப் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
ரிசியமுகபர்வதம் வந்தவன்என்ற வரலாறு காண்க.               (89)