5331.

எண் திசைமருங்கினும், உலகம் யாவினும்,
தண்டல் இல்உயிர் எலாம் தன்னை நோக்கின;

அண்டம்என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன்,தானும், தன் கமலக் கண்களால்.

     எண்திசைமருங்கினும் - எட்டுத் திசைகளின்எல்லையிலும்; உலகம்
யாவினும் -
எல்லா உலகங்களிலும்; தண்டல் இல் - இடம் விட்டுப் பெயராத;உயிர் எலாம் - உயிர்க்கூட்டங்கள் முழுவதும்; தன்னை
நோக்கின -
அனுமனைப் பார்த்தன; தானும் - அந்த அனுமனும்; தன் -
தன்னுடைய;கமலக் கண்களால் - தாமரை போலும் கண்களால்; அண்டம்
என்றதின்உறை -
மேலுலகம் என்று கூறப்படுவதில் வாழும்; அமரர்
யாரையும் -
எல்லாத் தேவர்களையும்; கண்டனன் - நேரே பார்த்தான்.

    அனுமன் எல்லாஇடங்களிலும் வியாபித்து இருந்தமையால் உயிர்கள்
அவனைக் கண்டன. உயர்ந்து இருந்தமையால் அவன் தேவரைக் கண்டான்.
இதனால் பெருக்கமும் உயரமும் பேசப்பட்டது. மருங்கு - எல்லை. 'மருங்கு
அறிவாரா மலை' (கலி 48) இனியர் உரை காண்க.                  (104)