பேருரு அடக்கப்பிராட்டி வேண்டுதல். 5333. | வஞ்சிஅம்மருங்குல் அம் மறு இல் கற்பினாள், கஞ்சமும் புரைவனகழலும் கண்டிலாள்; 'துஞ்சினர்அரக்கர்' என்று உவக்கும் சூழ்ச்சியாள், 'அஞ்சினென் இவ்உரு; அடக்குவாய்' என்றாள். |
வஞ்சி அம்மருங்குல் - வஞ்சிக் கொடி போலும்இடையை உடைய; அ - அந்த; மறு இல் கற்பினாள் - குற்றமற்ற கற்பை உடைய பிராட்டி; கஞ்சம் புரைவன - தாமரை மலரை ஒத்தனவான; கழலும் - (அனுமனின்) திருவடிகளையும்; கண்டிலள் - கண்டாள் இல்லை (அவள்); அரக்கர் - அரக்கர்கள்; துஞ்சினர் - (இவனால்) இறந்தவராவார்; என்று உவக்கும் - என்று மகிழ்ச்சியடையும்; சூழ்ச்சியாள் - எண்ணத்தை உடையவளாய்; (அனுமனை நோக்கி) இவ் உரு - இந்த உருவத்தைக் கண்டு; அஞ்சினென் - அடக்கிக் கொள்க; என்றாள் - என்று கேட்டுக் கொண்டாள். அனுமனின்பேருருவின் மாட்சியை வி்ளக்கக், கழலும் கண்டிலள் என்றான் கவிச்சக்கரவர்த்தி. கஞ்சமும் என்பதில் உள்ள 'உம்' அசை. கஞ்சம் புரைவன என்க. களிறு சென்று களன் அகற்றவும் (புறம் 26) (106) |