5337. | 'ஆழி நெடுங் கை ஆண்தகைதன் அருளும், புகழும், அழிவு இன்றி, ஊழி பலவும்நிலைநிறுத்தற்கு, ஒருவன் நீயே உளை ஆனாய்;- பாழி நெடுந்தோள் வீரா !-நின் பெருமைக்கு ஏற்ப, பகை இலங்கை ஏழு கடற்கும் அப்புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ ? |
பாழிநெடுந்தோள் - பருத்து நீண்டதோள்களை உடைய; வீரா !- அனுமேன நீ; ஆழி நெடுங்கை - சக்கரம் ஏந்தும் கரத்தைப் பெற்ற; ஆண் தகை தன் - ஆடவருள் சிறந்த இராமபிரானின்; அருளும் - அருளும்; புகழும் - புகழும்; அழிவு இன்றி - அழிவு அடையாமல்; ஊழிபலவும் - பல யுகங்களும்; நிலை நிறுத்தற்கு - நிலைத்துநிற்பதற்கு; ஒருவன் நீயே - ஒப்பற்ற நீயே; உளை ஆனாய் - (தகுதி)உள்ளவன் ஆனாய்; நின் பெருமைக்கு ஏற்ப - உன்னுடைய விசுவரூபத்துக்குப் பொருத்தமாக; பகை இலங்கை - உலகத்தின் பகையான இலங்கையானது; ஏழு கடற்கும் - ஏழு சமுத்திரங்களுக்கும்; அப் புறத்தது - அப்பால் இருப்பதாக; ஆகாதது - அமையாமல்; இருந்தது - (ஒரு கடலின் நடுவில்) இருப்பது; இழிவு அன்றோ - (உன் சிறப்புக்கு) தாழ்வு அல்லவா. அனுமனின்வீரத்துக்கு 'உரைகல்' ஒரு கடல் கடந்ததன்று. அவன் ஏழு கடலைக் கடந்தால்தான் அவன் வீரம் சரியாக உணரப்படும் என்பது குறிப்பு. (110) |