5343.

'வாலி இளவல், அவன் மைந்தன், மயிந்தன்,
                     துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன்,குமுதாக்கன், பனசன், சரபன்,
                     நெடுஞ் சாம்பன்,
காலன் அனையதுன்மருடன், காம்பன், கவயன்,
                     கவயாக்கன்,
ஞாலம் அறியும்நளன், சங்கன், விந்தன், துவிந்தன்,
                     மதன் என்பான்;

     வாலி இளவல் -வாலியின்தம்பியாகிய சுக்கிரீவன்; அவன் மைந்தன்
-
அவனுடைய புதல்வனாகிய அங்கதன்; மயிந்தன் துமிந்தன் - ;
வயக்குமுதன் -
வெற்றியை உடைய குமுதன்; நீலன்
 - ; இடபன் -
;குமுதாக்கன் - ; பனசன் - ; சரபன் - ; நெடுஞ்சாம்பன் -
நீண்ட
ஆயுளையுடைய சாம்பன்; காலன் அனைய - யமனைப் போலும்; துன்மருடன் - ; காம்பன் - ; கவயன் - ; கவயாக்கன் - ; ஞாலம்
அறியும் நளன் -
உலகத்தாரால் அறியப்பட்ட நளன்; சங்கன் - ; விந்தன் -; துமிந்தன் - ; மதன் என்பான் - மதன் என்று கூறப்படுபவன்.

    வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன்... மதன் இப்பாடலும் அடுத்த பாடலும்
ஒரு தொடர். மயிந்தன் துமிந்தன் இரட்டையர். குமுதன் ஆம்பல் மலர்
போலும் நிறமுடையவன். இடபன் - காளை போல்பவன். குமுதாக்கன் -
ஆம்பல் போலும் கண்களைப் பெற்றவன். சரபன் - சரபப் பறவை
போன்றவன். நீண்ட ஆயுள் பெற்றவன் ஆகையால் நெடுஞ்சாம்பன் என்று
பேசப்பட்டான். துன் மருடன் - பொறுக்கவொண்ணாச் சீற்றத்தான் கவயன் -
காட்டுப் பசுப் போல்பவன். கவயாட்சன் - காட்டுப் பசுவின் கண் பெற்றவன்.
சங்கன் - சங்கு போலும்நிறமுடையவன்.                      (116)