5348.

'அறிந்து,இடை, அரக்கர் தொடர்வார்கள்
                           உளராமேல்
முறிந்து உதிரநூறி, என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல் !நின் நிலைமை கண்டும்,
                           நெடியோன்பால்,
வெறுங் கைபெயரேன் - ஒருவராலும் விளியாதேன்.

     நெறிந்த குழல் !- சுருண்டகூந்தலையுடைய அம்மையே !; அறிந்து
-
(யான் உன்னைச் சுமந்து போவதை) தெரிந்து; இடை தொடர்வார்கள்
அரக்கர் -
இடையிலே என்னைத் தொடரும் அரக்கர்கள்; உளராமேல் -
இருப்பார்களேயானால்; முறிந்து உதிர நூறி - அரக்கர்கள் சிதைந்து
உதிரும்படி அழித்து; என் மனச் சினம் - என் உள்ளத்தில் உள்ள சீற்றத்தை;
முடிப்பேன் - தணித்துக் கொள்வேன்; ஒருவராலும் விளியாதேன் -
ஒருவராலும் சாகாவரம் பெற்ற நான்; நின் நிலைமை கண்டும் - உன்னுடைய
துன்ப நிலையைப் பார்த்தும்; (அதற்குப் பரிகாரம் தேடாமல்) நெடியோன்
பால் -
இராமபிரான் பக்கல்; வெறுங்கை பெயரேன் - வெறுங்கையுடன்
போகமாட்டேன்.

     உளராமேல்என்றதனால் அரக்கர் பின்பற்றி் வாரார் என்று அனுமன்
கருதினான். சினம் அரக்கர்களின் கொடுஞ்செயலால் வந்தது. ஒருவராலும்
விளியா வரம் பெற்றது நன்மையைச் செய்யவும் தீமையை அழிக்கவுமே என்று
அனுமன் தன் மனக் கருத்தை உணர்த்தினான். நெறிந்த குழல் - சுருண்ட
கூந்தல். நெறிந்த கருங்குழல் மடவாய் (பெரியாழ்வார் 3. 10. 1) நின் நிலைமை
என்றது, பிராட்டி பிறருடைய உதவியின்றித் தவிக்கும் நிலைமை. இதனை
'உண்டு துணை என்ன எளிதோ' (கம்ப. 5345) என்று முன்பே பேசப் பெற்றது.
                                                          (4)